Wednesday, April 02, 2008

மாறிய பருவங்கள்

வசந்தகால பூக்கள்
மழைகால மழை
கோடை வெயில்
குளிர் பனி
நிரந்தரமாய் பருவங்கள்,
நகருதல் இல்லாமல்
குறுகிய எல்லைகளுக்குள்
வாழ்ந்த மிருகம்
மனிதன்,
முரண்பட்ட
இயற்கை உறவுகள்;
தென்றலின் முகவரி
வசந்தகாலமா ?
பனியின் முகவரி
குளிர்காலமா ?
வெயிலின் முகவரி

ோடைகாலமா ?
மாறிய பருவங்கள் ....
அடை மழை
கடும் வறட்சி
கொட்டும் பனி
சுழன்று அடிக்கும்
சூறாவளி
வெடித்து கிளம்பும்
எரிமலை - என
தன்னையே
சரிசெய்யும் இயற்கை,
அழியும் மிருகமாய்
மனிதன்.







No comments:

LinkWithin

Related Posts with Thumbnails