Tuesday, October 28, 2008

எல்லாம் நிகழும் எதுவும் நிகழும்

நடப்பது எளிது
எனில்நடந்து விடு
எதற்காக காத்து நிற்கிறாய்
நீ காத்திருக்கும் நேரம்
யார் யாரோ
உன் வழிப்பாதையில்
அவர்களைபின் தொடர்பவனாய் நீ
பின் தொடர்வது எளிது
வழி நடத்துவது கடினம்
பின்னால் திரும்பு
அனுபவங்கள்
உனை அரவணைக்க
முன்னால் பார்
எதிர்காலங்கள் வழியாய்
அந்த கணம்
நீ நடந்தாக வேண்டும்
இல்லையேல் இறந்த காலங்களுக்குள்
சிதைக்க படுவாய்
எதிர்காலம் என்னவோ
பொய் தான்
பொய் தான் உன்வாழ்வு
நட...
வழிபடும் தடைகளை
மெதுவாய் கட...
எல்லாம் நிகழும்
எதுவும் நிகழும்
இது தான் நிகழ
அவசியமில்லை
ஏற்றுக்கொள் எல்லாம்
உனக்கு உரியதே


3 comments:

Aruna said...

//வழிபடும் தடைகளை
மெதுவாய் கட...
எல்லாம் நிகழும்
எதுவும் நிகழும்
இது தான் நிகழ
அவசியமில்லை
ஏற்றுக்கொள் எல்லாம்
உனக்கு உரியதே//

நல்லாருக்குங்க உங்க கவிதை..
அன்புடன் அருணா

திகழ்மிளிர் said...

/எல்லாம் நிகழும்
எதுவும் நிகழும்
இது தான் நிகழ
அவசியமில்லை
ஏற்றுக்கொள் எல்லாம்
உனக்கு உரியதே./

அருமை

தவறுகள் said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails