Thursday, October 30, 2008

சஞ்சலமாய் மனது

கண்களை கவர்ந்த
வண்ணம்
ஆடை உடுத்திய
கைநாடி பிடித்து
மருந்துவம் பார்க்கும்
மருத்துவர் தன்
வயிற்று பிழைப்புகாய்
அங்கும் இங்கும்
தெருவில் அலைந்தவராய்
ஆடை வண்ணம் கவர
கண்களால் உற்றுப்பார்க்க
என் கண்களை
உற்று நோக்கியவராய்
ஜயா..
சித்த மருத்துவம்
வந்து விழுந்த
வாய் வார்த்தைகள்
விரும்பாது
என் முகம் திருப்ப
திரும்பவும்
என் முகம் நோக்கியவராய்
மருத்துவம் பார்த்து
காசு பார்க்கும் ஆவலாய்
அவர் மனது
விரும்பாமலும் விரும்பியும்
வெளிகாட்டும்
எனது முகம்
சஞ்சலமாய் மனது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails