கண்களை கவர்ந்த
வண்ணம்
ஆடை உடுத்திய
கைநாடி பிடித்து
மருந்துவம் பார்க்கும்
மருத்துவர் தன்
வயிற்று பிழைப்புகாய்
அங்கும் இங்கும்
தெருவில் அலைந்தவராய்
ஆடை வண்ணம் கவர
கண்களால் உற்றுப்பார்க்க
என் கண்களை
உற்று நோக்கியவராய்
ஜயா..
சித்த மருத்துவம்
வந்து விழுந்த
வாய் வார்த்தைகள்
விரும்பாது
என் முகம் திருப்ப
திரும்பவும்
என் முகம் நோக்கியவராய்
மருத்துவம் பார்த்து
காசு பார்க்கும் ஆவலாய்
அவர் மனது
விரும்பாமலும் விரும்பியும்
வெளிகாட்டும்
எனது முகம்
சஞ்சலமாய் மனது.
No comments:
Post a Comment