22.11.2008 முதல் நாள் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் சொந்தகாரர் வீட்டு விழாவிற்கு சென்றுவந்தார்கள். அவர்கள் வைத்து கொடுத்த வெற்றிலை சீவல் நிறைய இருந்தது. வெற்றிலைபோடுபவர்கள் யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று வேலைக்கு வரும்பொழுது வாங்கி வந்தேன்.
வரும்பொழுது எனக்கு முகம் தெரிந்தவர்கள் யாரவது தென்படுகிறார்களா அதுவும் வெற்றிலை போடுபவர்கள்
தென்படுகிறார்களா என…
தேடிய கண்களும் மனதும் தேடியபடியே..
பொருள் வீணாக போய்விடகூடாது என நினைத்து எடுத்துவந்தேன்.
தெரிந்தவர்களாக இருந்தால் பராவாயில்லை தெரியாதவர்களை அணுகுதலில் என்னிடம் தயக்கம்
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய், வெற்றிலையும் வாடியது.
No comments:
Post a Comment