Sunday, November 02, 2008

பூகம்ப வேதனை

உயிர் அற்ற
சடலங்களுக்கிடையே
உயிர் தப்பிய
குழந்தையின் பசி
சோற்றுக்காய்
தாயை தேடும் கண்கள்
ஆதரவாய் உணவு நீட்டிய
பல கரங்கள்
குழந்தையின் கண்கள்
அன்பான தன்தாயின்
கரங்களை தேடி
வன்முறையாய் பசி
உணவு ஊட்டிய
கைகளில் அடக்கம்
அடங்கிய பசி
குழந்தையின்
அடுத்த தேடலாய்
தன்னோடு விளையாடும்
தம்பி பாப்பாவை நோக்கி
பூமி தாயின்
வினாடி கோபமாய்
குழந்தையின்
நிரந்தர வேதனை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails