Monday, November 24, 2008

என்னைப்பற்றி கவலைப்பட யார்?

23.11.08 காலை முதல் கருமேகம் சூழ்ந்த வானம் மதியம் நெருங்கும் சமயம் மழை ஆரம்பித்தது. எப்போதும் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போக வேண்டும்.

மழை பெய்து கொண்டிருந்தது. கடையை மூடிவிட்டார்கள் மழை விடும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் வீட்டுக்கு சென்றுவிடலாம் என்ற நினைவுகளுடன் காலம் தன்பணி செய்ய நேரம் ஆகிக்கொண்டிருந்தது.

மழைக்காக ஒதுங்கிய ஆடு துணையாக வந்தது. தனிமை எல்லா சமயங்களிலும் ஒத்துவராது என்பதை அனுபவித்து உணர்ந்தேன். பசி வேறு மனதில் ஏதோ ஏதோ நினைவுகளின் சங்கமம் வேறு

மழை நின்றபாடில்லை துணையாக நின்ற ஆடும்மழையில் நனைந்தபடி வேறுஇடம் நோக்கி நகர்ந்து விட..

சாலையில் அவர் அவர்கள் குடை பிடித்துகொண்டு மழையில் நனைந்துகொண்டு சென்றபடி இருக்க என்னுடைய பசி பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை.

மழை நின்றபாடில்லை நானும் நனைந்துகொண்டே எனது வீடு நோக்கி…

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails