29.11.2008 காலை வாய்க்கால் பக்கம் சென்றேன். வாய்க்கால் இரு கிளையாக பிரியும் இடம் அதை ஒட்டிய சிறுபள்ளம்
ஒருவர் கீழ் குனிந்து அதை கைகளால் துலாவி கொண்டிருந்தார்.
அவரது செய்கையால் ஈர்க்கப்பட்ட நான் அவர் அருகில் சென்று என்ன என்று வினவ..
விறால் மீன் ஒன்று எனச்சொல்லி தன்கைகளால் துலாவி கொண்டே இருந்தார்.
விறால் மீனும் அவருக்கு போக்கு காட்டி அங்கும் இங்கும் செல்வதாக இருந்தது.
கடைசியில் ஒரு ஓரமாக ஒதுங்கியது எனக்கு தெரிய அவருக்கு தெரியவில்லை.
என் ஆசை நான் சொல்லவில்லை அது இருக்கும் இடத்தை..
நாம் பிடித்து கொண்டு போய்விடலாம் என்ற மனதுடன் அவர் தடுமாற்றத்தை பார்த்து கொண்டே நின்றேன்.
கடைசியாய் அது இருக்கும் இடம் அறிந்து தன்துண்டினால் அவர் பிடித்தார். தடுமாறிய மனதுடன் ஏதோ சங்கடம் ஆட்கொள்ள அந்த இடம் விட்டு நகர்ந்தேன்.
No comments:
Post a Comment