நண்பர் ஒருவர் வேலையை மாற்றி கொண்டே இருப்பார். சில மாதங்கள், சில நாட்கள் வேலை மாறி கொண்டே இருக்கும்.
நிரந்தர வருமானம் எதுவும் கிடையா சூழல்.
எப்படிடா புள்ளக்கு புத்தி வரவக்கறது யோசிச்சு ..குடும்ப சகிதமா பொண் பாத்தாங்க காண்ணாலம் பண்ண நம்மாளுக்கு..
அதுலயும் நம்மாளு ..பாத்தீங்கண்ணா நிச்சயம் வர போயி பொண்ணு வேண்டான்னு சொல்லிருவாரு
மாட்னது யாருனு பாத்தீங்கனா மாப்பிள்ள புள்ளய ரெக்மண்ட் செஞ்சவங்க, மாப்பிள்ள பெத்தவங்களுதான்.
எப்பா உன்னோட விசயத்துல தலையிட மாட்டோம் சொல்லிட்டு சொந்த பந்தமும் வந்தவங்க போனவங்க கழட்டிகிட்டாங்க இது ஏன்டா வம்புன்னுட்டு ..
நம்மாளு ரொம்ப கவலையாயி..
கடைக்கு ரெண்டு மாத்தர மேனி அஞ்சு ஆறு கடைங்க..
மாத்தரல்லாம் நம்மாளு வயித்துல..
ப்ரெண்டுகிட்ட சொல்லிருக்கார் நாளக்கு காத்தால பாடை கட்டிடுங்கன்னுட்டு..
நம்மாள நோன்டி சேதி என்னன்னு கேட்டா துாக்க மாத்தர முழுங்கி்ட்டேன்னு..
அப்புறம் ஆஸ்பத்திரி தான். நம்மாளு தற்கொலையில தோத்து போயிட்டாங்க.
No comments:
Post a Comment