Monday, December 15, 2008

ஏன்டா, என்ன இன்னா…..

கிராமத்து ஆள் தன்னுடைய தொலைக்காட்சி பெட்டியின் ரிமோட் பழுது ஆகிவிட்டதால் சரிசெய்ய பக்கத்திலிருக்கும் நகரத்திற்கு வந்தார்.

தொலைக்காட்சி சீர்செய்யும் கடைக்கு வந்து ரிமோட்டை சரி செய்யகொடுத்தார். அவர் வந்த சமயம் கடையின் மெயின் மெக்கானிக் இல்லை கடையில் வேலை கற்றுக்கொள்ளவந்த பையன்கள் இருவர் இருந்தார்கள்.

என்னங்க வேணும்? பையன்கள்

ரிமோட் சரி செஞ்சு குடுப்பா..

குடுங்க என்று வாங்கி ரிமோட்டை பிரித்து தொலைக்காட்சி சினிமாவில் முழ்கிவிட..

தம்பியலா..

போங்க போயிட்டு பத்து நிமிஷம் கழிச்சு வாங்க..

மற்ற வேலை முடித்து பத்து நிமிடம் கழித்து திரும்பி வர..

பையன்கள் வேறுவேலையில் முழ்கி இவர் வருவதை அறிந்தும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தினார்கள்.

அவருடைய ரிமோட்டைதான் சரி செய்கிறார்கள் என நினைத்துபொறுமையாக கிட்டதட்ட அரைமணிநேரம் நின்றிருப்பார்.

தம்பியலா …என்ன ரிமோட்ட சரி செஞ்சாச்சா..

அத சரி செய்ய முடியாது வேறதான் வாங்கனும்.

முன்னடியே சொல்லாம்ல தம்பியலா…

அதாம் இப்ப சொல்றோம்ல..

கோபம் தலைக்கேற கிராமத்து ஆள் ஏன்டா என்ன இன்னா மௌட்டி பய நினச்சுக்கிட்டியலா..

முட்ட…. கம்மானாட்டியலா.. என்று ஏகத்துக்கும் எகிற

பயந்து போன பையன்கள் இருங்கண்ண இந்த பாத்து குடுத்துடுறோம் என்று சொல்லி

அடுத்த ஐந்து நிமிடத்தில் சரிசெய்து கொடுத்தார்கள்.

அலட்சிய படுத்துதலையும் அவமதிப்பையும் யார் தாங்கிறதும் கொஞ்சம் கஷ்டம் தாங்க.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails