அப்பா….. நிம்மதி பெருமூச்சு விட்டாள் அவள்.
உடல் வலி அதிகம் இருக்கும் தலை சுத்தலா இருக்கும்மா..
வெயிட்..கியிட்..தூக்கதம்மா.. பாத்து இருந்துங்க...
பெரியவங்க ஒருவரின் அட்வைஸ்.
மாதவிலக்கு தள்ளி போக போன நாள் முதலாய் கனவுகள் பூக்க ஆரம்பித்தது. கனவு குதிரையில் மிக வேகமாக பயணம் செய்தாள்.
வித விதமாய் கனவுகள் கண்டு உள்ளம் மகிழ்ச்சி அடைந்தாள். குளிப்பாட்டி உணவூட்டி ஆடைஅணிவித்து பள்ளி அனுப்பி இன்னும் எவ்வளவோ..
கடுமையான வயிற்றுவலி வழக்கம் போலவே இருக்க அதிர்ந்தாள்.
ஏன் இப்படி என்று தனக்குள் கேள்விகள்கேட்டபடியே கொட்டியது விழிகளில் கண்ணீர். இந்த முறை வெற்றி கிட்டிவிடும் என்ற நம்பிக்கையின் வழி ஏற்பட்ட ஏமாற்றம்.
உறவுகளின் வழியே இன்னமொரு வாய்ப்பை எதிர்நோக்கி...
No comments:
Post a Comment