ஆறாவது படிக்கும் மாணவன் ஒருவன் தன் சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான் .
பந்து வீச அவனை அழைத்தார்கள் . முதல் பந்து மட்டையாளனுக்கு ஆப் சைடில் நன்றாக விலகி சென்றது.
உடனே பவுலர் ஓ… அய்யோ.. சே..என்று இருகைகளை தலையில் கட்டிக்கொண்டான்.
அவன் வீசிய ஒவ்வொரு பந்தும் ஸ்டம்புக்கு நேராக செல்லவில்லை. ஆனால் அவன் காட்டிய அங்க சேட்டைகள் அற்புதம்.
அவனுடைய வெளிப்பாடு சிறப்பாக பந்து வீசும் பவுலர்கள் சிறு இடைவெளியில் விக்கெட்டை தவறவிட்டு
வெளிப்படுத்தும் உடலியக்க முகபாவனைகளாக அமைந்தன.
நுணுக்கம் அறியாமல் பந்து எப்படி வேண்டுமானலும் வீசலாம் சேட்டைகள் அவசியம் என்பதை அவன் மனதில் பதிய வைத்துள்ளான் .
சரியான வழிகாட்டுதல் இல்லாததால் வந்த விளைவு.
சரியான வழிகாட்டி இல்லா தவறான கற்றுக்கொள்ளல் ஆபத்தான விளைவுகளையே கொண்டு வரும்.
No comments:
Post a Comment