Monday, December 08, 2008

பகலும் இரவும் வரும் போகும்

கேள்வி குறியாய்
எல்லைகளின் பாதுகாவல்
பிய்ந்து போன
வேலிகள்

உடைந்து நிற்கும்
முன்சுவர்
மேற்கூரை இல்லா
தனித்து நிற்கும்
கல்தூண்கள்

சுண்ணம் பெயர்ந்துபோன
சுவர்கள்
புது ஓவியமாய்
மழை துளிகளின் கோடுகள்
உட்புற சுவர்

உட்கார ஆட்கள் இல்லா
சாய்வு நாற்காலிகள்

மௌனம் கலைக்கும்
சிட்டு குருவிகள்
சத்தம்

சுருங்கிய தோலாய்
நடமாடும் உயிர்கள்

பகலும் இரவும்
வரும் போகும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails