கேள்வி குறியாய்
எல்லைகளின் பாதுகாவல்
பிய்ந்து போன
வேலிகள்
உடைந்து நிற்கும்
முன்சுவர்
மேற்கூரை இல்லா
தனித்து நிற்கும்
கல்தூண்கள்
சுண்ணம் பெயர்ந்துபோன
சுவர்கள்
புது ஓவியமாய்
மழை துளிகளின் கோடுகள்
உட்புற சுவர்
உட்கார ஆட்கள் இல்லா
சாய்வு நாற்காலிகள்
மௌனம் கலைக்கும்
சிட்டு குருவிகள்
சத்தம்
சுருங்கிய தோலாய்
நடமாடும் உயிர்கள்
பகலும் இரவும்
வரும் போகும்.
No comments:
Post a Comment