ஒருமுறை
அவன்முகம் நோக்க
உற்று பார்க்கும்
அவன் விழிகளின்
மலர்ச்சி
தலை சாய்க்க
சொல்லும் என்மனது
மறுமுறை பார்க்கும்
எனது விழிகள்
புன்னகைக்கும்
அவனது முகம்
என்னில்
அவன் சிரிப்பு
அவன் பேச்சு
சொந்தம் கொள்ள
முயல்கிறேன்
கையசைக்கிறேன்
விலகுகிறான்
வேதனையான
என் இதயத்தில்
அவன் விழிகளின்
மலர்ச்சி மட்டும்
மகிழ்ச்சியாய்
நினைவுகளோடு..
No comments:
Post a Comment