Thursday, January 01, 2009

பணம் இல்ல என்ன செய்ய..

பத்து லட்சம் பணம் சிங்கையில் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வீட்டுக்கு அனுப்புனாருங்க அண்ணன். தம்பிக்கு கொஞ்சம் கதயும் கவிதயும் தெரியுமுங்க

அதனாலயே இவரோட நண்பரு வட்டதுல இவரு கவித நல்ல எழுதுவாரு கதயும் எழுதுவாரு பேரு.

தம்பிகாருக்கு மனசுல கனவெல்லாம் வர ஆரம்பிச்சாச்சு தன்ன நம்பலங்க தன்னோட எழுத்த நம்பினாரு .

நம்புனவருக்கு பட்டு கம்பள விரிச்சி வரவேற்பு நடத்துனுச்சு சினிமா.

அண்ணன் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் கட் பண்ணி நம்பிக்கையோட பணம் அனுப்புனாரு சிங்கையிலிருந்து பணம் வரவர தம்பிகாரு இந்த பணத்த ஜீட் விட்டார்.

அவரும் செட்டில் ஆகலங்க.

அண்ணன் வந்தாரு கதயெல்லாம் தெரிஞ்சுது. சரிபட்டு வராதுன்னுட்டு கல்யாணம் பண்ணிகிட்டு லோக்கல் போய் வேலக்கு சேந்தாரு.

தம்பிகாருக்கு பணம் இல்ல என்ன செய்ய.. பிரிடா சொத்தன்னு பிரிஞ்சாங்க.

அப்பிடியும் தம்பிகாரு சுதாரிக்காம தன்னோட பங்க காலி பண்ணிட்டார்.

பத்தல பசி ..அண்ணன் பங்க வெல பேசினார்.

எதையும் முறையா பதியல ..கிராமத்துல எல்லா வாக்கு தாங்க என்ன செய்ய..

அண்ணன் வந்து சண்ட போட்டாரு ..

பேசுனவங்க எதாச்சும் குடுத்துட்டு போப்பான்னு சொல்ல..

சண்டயோட ஊ ருக்கு போய் கல்யாணம் பண்ண பொண்டாட்டி சின்ன புள்ளங்கள விட்டுட்டு தூக்கு மாட்டிட்டாரு.

சாதாரணமா எழுதிட்ட இந்த வாழ்க்கையில் அண்ணனுடைய மனப்போராட்டம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியா மிகப்பெரிய சோகங்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails