Thursday, January 01, 2009

பசிதிருந்த நாய் தப்பிய புறா

சிறகுகள் முழுவதுமாய் வளர்ச்சியடைந்து பறக்க கற்றுக்கொண்டிருந்த புறா. கொஞ்சம் பறப்பது மரக்கிளையில் அமர்வது பறப்பதுமாக இருந்தது.

அண்டங்காக்கை ஒன்று இந்த புறாவை பார்த்தப்படி அமர்ந்து இருந்தது. புறாவின் பலவீனம் தெரிந்து துரத்தியது அண்டங்காக்கை அதனிடமிருந்து தப்பித்து வேறொரு மரக்கிளையில் அமர்ந்தது. முழுமையாக பறக்க கற்றுக்கொள்ளததால் திரும்பவும் அண்டங்காக்கையின் இலக்கானது.

இம்முறை புறா மரக்கிளையில்அமராமல் தரையில் பறந்து இறங்கியது.

இன்னொரு சோதனை தாயாராக இருந்தது. கற்றுக்கொள்ளும் வரையில் சோதனைதான் போலும் தரையில் அமர்ந்து உடனேயே ஒரு மூன்று கால் நாயின் இலக்கானது புறா. ஒரு கால் ஊனம் அந்த நாய்க்கு, அதனால் வெளியில் அதிகம் செல்லாமல் கிடைப்பதை உண்டு வாழ்ந்தது.

புறா எங்கு அமர்ந்ததோ அதற்கு மிக அருகில் தான் நாயின் இருப்பிடம் குபீர் என்று ஒரு பாய்ச்சல்….

பட..பட வென்று சிறகுகளை அசைத்தப்படி கண்இமைக்கும் நேரத்தில் தப்பித்து உயரே பறந்ததுபுறா.

நாய் பசிதிருந்தது


இந்நிலப்பரப்பில வாழ விருப்பட்டால் சோதனை களை சந்தித்தால்தான் வாழமுடியும்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails