Friday, January 16, 2009

ரெண்டுவாட்டி தான் அடிச்சேன்

ஒத்த வயதுடைய சிறுவர் சிறுமியர்கள் குளத்தில் குளித்து கொண்டிருந்தார்கள்.

ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை வாரி இறைத்து விளையாடினார்கள். ஒரு சிறுவன் ஒரு சிறுமியின் மீது தொடர்ச்சியாக தண்ணீரை வாரி இறைத்தான்.

இறக்காதேடா..

திரும்பவும் தொடர்ந்தான் சிறுவன்.

கம்மனாட்டி ..சொல்லறத கேளுடா..

மீண்டும் வேகமாக இறைத்தான் சிறுவன்.

கம்மனாட்டி.. தேவடியா பெத்த மவனே .. சொல்லிட்டே இருக்கேன் ப்ளார்..பட்.. என்னடா என்று அடித்தாள் .

ஏன்டி தம்பியஅடிச்ச.. சிறுவனுடைய அண்ணன்.

ஏன் எம்மேல தண்ணிய அடிச்சிட்டே இருத்தான். அதான்..என்றாள் சிறுமி

நான் ரெண்டுவாட்டி தான் அடிச்சேன் அழுதப்படியே சிறுவன்.

வாதங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தேவடியா பெத்த மவனே என்பதற்கான அர்த்தம் அந்த சிறுமி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிறுவர் சிறுமியர் அத்தனைபேரும் சேரி பகுதியில் வாழ்பவர்கள். பழகும் சூழல் பொறுத்தே வெளிவரும் வார்த்தைகளும் பழக்கவழக்கங்களும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails