Saturday, January 17, 2009

காணமல் போன கன்னியும் காளையும்

கூட்டத்துல யாராவது சின்னபசங்க இருந்தா வாங்கப்பா வந்து இதுல ஒரு சீட்டு எடுத்து கொடுங்க என்றார் ஊர்பெருசு.

டேய் தம்பி..போடா போய் எடுத்துக்கொடு இன்னொரு பெருசு.

உருட்டி போடப்பட்ட சீட்டுகளில் லபக் ஒன்றை எடுத்து ஊர் பெருசிடம் நீட்டினான் சிறுவன்.

பிரித்து பார்த்த பெருசு கதிர்வேல் பாண்டியர் பையன் நடராஜனுக்கு சீட்டு உழுந்துறுகுப்பா..

அவர் வீட்டுலதான் முதமாடு அவுக்கனும் கன்னிப்பொங்கலுக்கு என்று கத்தினார்.

அவங்க வீட்டுல மாடே இல்லேங்க என்னங்க செய்யறது என்று கத்தினார் கூட்டத்தில் ஒருவர்.

வழக்கம் போல எலுமிச்சபழமோ இல்லாட்டி கோழியே காவு வாங்கிட்டு மத்தவீட்டுகளேந்து மாடு அவுத்துட்டு மந்தைக்கு வாங்கப்போ..

கூட்டம் முடிஞ்சுது எந்த சண்ட சச்சரவும் இல்லாம சந்தோசமா மாடு அவுத்துடுங்கப்போ என்றது பெருசு.

நீ வேறண்ண எங்கண்ண இங்க மாடு இருக்கு..அதெல்லாம் பாஞ்சு இருபதஞ்சு வருசத்துக்கு முன்னடிதான் எவ்வளோ மாடு எவ்வளோ சப்பரம் என்னத்த சொல்ல..

பொண்ணுங்க எவ்வளோ எட்டிபாக்கும் இப்பெல்லாம் எங்கண்ண என்று பெருமூச்சு விட்டார் பெருசு.

காலங்கள் மாறபாரம்பரியத்தின் சுவடுகளைதான் நாம் திரும்பி பார்க்கலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails