எப்பா நாளக்கு நீ பாட்டுக்கு ஏமாத்திபுடாத காலையில வீட்டுக்கு வேலக்கு வந்துரு..
காத்தால ஒம்பது மணிக்கு வந்துறேங்க..
சரி..சரி ..வந்துடுப்பா..
மறுநாள் காலை ஒன்பது மணி என்ன வேலங்க எனக்கு ...
அந்த மரம் இருக்குல்ல அதுல கிளய கழிச்சு வேலிய அடைக்கனுப்பா
அப்புறங்க..
அங்க புல்ல செதுக்கி ஒழுங்கு பண்ணிருப்பா..
சரிங்க.
பாத்துட்டு இரு இந்தா வந்துறேன்.
போயிட்டு வாங்க.. நான் பாத்துக்குறேன்
வேலை முடிந்தது வந்துட்டாங்களா..
இந்தாவந்துருவாங்கப்பா.... வீட்டுகார அம்மா
வீட்டு கொழம்பு காகறி அரிசி வாங்கி்ட்டு போவனும்மா.. வந்துருவாங்களாம்மா..
வந்துருவாங்க..வந்துருவாங்க உட்காரு..
என்னப்பா வேல முடிச்சிட்டியா..
முடிச்சுட்டேங்க..
நாளக்கும் வந்துரு வேல இருக்கு அதோட
சேத்து இன்னய சம்பளத்த வாங்கிக்கலாம்
இல்லங்க அந்தகாசுக்கு சோழி இருக்குங்க..
நா இல்லேன்னு சொல்லல...
நாளக்கு வா சேத்து வாங்கிக்கலாம்.
உழச்ச கூலியும் கெடக்காம புள்ளங்தீனி வூட்டு அரிசி என்ன செய்ய என்றப்படி பாத்து ஏதாவது இருந்தா கொடுங்க...
No comments:
Post a Comment