ச்சீ..த்தூ.. நீயும் பொண்ணா..
கோபமாய் இரைந்தாள் அந்த முதியவள்.
செய்யா குற்றத்திற்காக திட்டு வாங்கிய அந்த புதுப்பெண் நொந்து நூலாகினாள் மனத்திற்குள் உடைந்தாள் மௌனமாய் குமுறினாள்.
தவறாய் புரிந்து கொண்ட விசயம் தன்னோடு நெருக்கமானவர்களிடம் கோபம் காட்ட பயம்.
தன் கோபம் வெளிக்காட்ட பலவீனமாய் தெரிந்த புதுப்பெண் இரையானாள்.
பாவம் புதுப்பெண்ணிற்கு சண்டை போட தெரிந்தாலும் வந்தவுடன் சண்டையா ? நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம் சண்டைகாரி என்று நினைத்து விட்டால்என்ன செய்ய..
தன் நிலைமை நினைத்து தனக்குள் அழுதவாறே மௌனமாய் அவள்.
No comments:
Post a Comment