Friday, February 06, 2009

அன்புள்ள காதலா அன்புடன்…4

பேசும் விழிகளுக்குள்
மௌனமாய்
நான்

கருவிழி
எல்லைகளுக்குள்
சிறைப்பட்ட
எனது உருவம்

இதய துடிப்பாய்
சுருங்கி விரியும்
இமைகளின்
பாதுகாப்பு

தப்பி ஓட
நினையும்பொழுது
தடுத்து விட

என்னவன்
விழி சிறைக்குள்
நான்
சிறைப்பட்டாலும்

காலங்கள்
யாவும்
விநாடிகளே..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails