Monday, February 09, 2009

வசிப்பவர்களுக்கு தெரியும். பார்ப்பவர்களின் கண் களுக்கு ..

அடுத்து அடுத்து இருந்த இரண்டு வீட்டின் கதவுகளும் இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டபட்டிருந்தன. பார்ப்பவர் கண்களுக்கு வித்தியாசமாக இருந்த அந்தநிகழ்வு ஏன்? என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.
வீட்டிற்கு உடையப்பட்டவர்கள் தவிர யாரும் இந்நிகழ்வை முக்கியமாகஎடுத்து கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் ஆகியது மேற்கூரையின் ஓடுகள் பிரிக்கபட்டு எலும்பு கூடாய் நின்றன இரண்டு வீடுகளும் இப்பொழுதும் பூட்டுகளால் பூட்டபட்டிருந்தது.

பார்த்தவர்கள் விசாரித்தார்கள்யார் வீடு இது ? ஏன் இப்படி ? என்று அனுமானம் செய்து சொன்னவர்கள்

என்ன சொத்து பிரச்சனையா இருக்கும் அதுவும் அண்ணன் தம்பி இடையே நடக்கும் பிரச்சனையாகத்தான் இருக்கும் என்றார்கள்.

இரண்டு நாட்கள் சென்றது வீடுகளின் மேல் இருந்த மரங்களும் பிரிக்கப்பட்டது.

என்னதான் பிரச்சனை அருகில் வசிப்பவர்களுக்கு தெரியும். பார்ப்பவர்களின் கண் களுக்கு மனதில் ஆவலை தூண்டியவாறு இருந்தது.

அவர் அவர் பார்வைகளுக்கு தக்கவாறு பிரச்சனைகள் பேசப்பட்டன. அரைகுறையா ய் தெரிந்தவர்கள் சரி எது தவறு எது என்று விவாதம் செய்து கொண்டார்கள். தெரிந்தவர் தெரியாதவர் எதுவும் பேசாமல் பார்த்தபடி விலகி சென்றார்கள்.

இரண்டு வீடுகளும் இப்பொழுதும் பூட்டுகளால் பூட்டபட்டிருந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails