நடுந்தர வயது பெண்மணி அந்த வீட்டில் தனியாக குடியிருந்தாள். அவளுக்கு பிள்ளைகள் இருப்பதாக தெரியவில்லை.
சொந்த பந்தங்கள் அவளுக்கு அருகில் வசிப்பவர்களே எதையோ இழந்த முகத்துடன் பெரும்பாலும் தனியாக உட்கார்ந்திருந்து நேரம் கழிப்பாள். பொழுது போகவில்லையென்றால் எங்கயாவது நடந்து போய் வருவாள்.
அவளுடைய வாழ்க்கை அவளுக்கு எவ்வாறு இருந்ததோ தெரியவில்லை அவளைப்பற்றி தெரிந்தவர்களுக்கு அவளுடைய வாழ்க்கை சூன்யமே..
கணவனுடன் ஒத்துபோக வாழ்க்கை கணவனுக்கு பிடிக்காமல் போய் கோர்ட் படிக்கட்டுகள் ஏறி விவகாரத்து பெற்று ஜீவானாம்ச தொகை ப்பெற்று அதில் மேற்கண்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட கணவனுடைய வீட்டில் வசித்து வந்தாள்.
சில வருடங்கள் சென்றது இவளுடைய கணவனுக்கு பணதேவை
இவள் வசிந்து வந்த வீட்டை விற்க முடிவு செய்து இவளை காலி செய்ய சொல்ல இவள் மறுக்க பிரச்சனை தொடர்ந்து நடைப்பெற்றது.
எந்தவொரு முடிவுக்கு ஒத்துவராது சண்டை போடுவதுமாக காலம் கழிந்து கொண்டிருந்தது.
No comments:
Post a Comment