Monday, February 16, 2009

மனிதன் தான் இறைவன் படைப்புகளிலே மிகவும் உயர்ந்தவன். சிரிப்பா இருக்குல்ல...

குஜராத் வைரத் தொழிற்சாலைகளில் வேலை இழந்த தொழிலாளர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மருந்து பரிசோதனைக்காக பயன்படும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலையால் மூடப்பட்டு வரும் வைரத் தொழிற்சாலைகளினால் வேலை இழந்து தொழிலாளர்கள் குஜராத்தில் அகமதாபாத் பரோடா மற்றும் சூரத் நகரங்களில் உள்ள மருந்து பரிசோதனைக் கூடங்களில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகள் பக்க விளைவு ஏதும் ஏற்படுகிறதா என்று சோதித்து பார்க்க காசுக்காக தங்களை இதில் ஈடுபடுத்துகின்றனர்.

சோதனைக்கு உட்படுத்தப்படும் நாட்களை பொறுத்து அவர்களுக்கு 5 ஆயிரம் முதல்15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

ஆயுள் முழுவதும் பக்க விளைவு இருக்கும். இதற்கு அதிகம் பயன்படுவது ஏழைகள்தான் .

மனிதன் தான் இறைவன் படைப்புகளிலே மிகவும் உயர்ந்தவன். சிரிப்பா இருக்குல்ல...

1 comment:

பகுத்தறிவு? said...

"இறைவனை தேடி ஓர் அறிவியல் பயணம்.

LinkWithin

Related Posts with Thumbnails