Monday, March 02, 2009

என்னடி..என்ன உடம்புக்கு..

டேய்..தம்பீ..புது சட்ட வேணுமாடா.. தந்தை

வேணாம்..எப்பா ஒரு பேட் வாங்கி தாப்பா..

மறுநாள் புது பேட் வாங்கி பையனிடம் நீட்டினார் தந்தை

ஹைய்யா என்று வாங்கி கொண்டு நண்பனிடம் காட்ட ஓடினான் பையன்

அவனது நண்பன் கேட்டான் யாருடா வாங்கி கொடுத்தது

எங்கப்பா..

எங்கப்பா எம்மேல எவ்வளவு பாசமா தெரிமா இருப்பாரு..நான் எத கேட்டாலும் வாங்கி கொடுத்துடுவாரு..

அன்றைக்கு கடுமையான வேலை வீட்டில் அவளுக்கு வேலை சென்று திரும்பி வந்த கணவன் இவள்உடல் வலியுடன் படுத்திருப்பதை பார்த்துவிட்டு

என்னடி..என்ன உடம்புக்கு..

ஒன்னுமில்லங்க..உடம்ப வலிக்குது..

ஏதும் மாத்தர முழுங்கிறியா..இல்ல எதாச்சும் தைலம் தேச்சு விடுவா என்று கேட்டான்.

மனசு குளிர்ந்து போய் என் புருசன் மாதிரி உண்டா என்று பக்கத்து வீட்டுகாரியிடம் புகழாரம்.

பிறர் நலன் தொடர் கவனம் அன்பின் விளக்கமாய் இது போன்று பல விசயங்களை சொல்லலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails