Saturday, March 07, 2009

ஃப்ளோசரன்ட் பல்புகளில் மறைந்துள்ள ஆபத்து

ஃப்ளோசரன்ட் விளக்குகள் குறைவான மின்சாரம் எடுத்து கொண்டு அதிக வெளிச்சம் தருவதால் சமீபகாலமாக அதனுடைய
பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

மின்சேமிப்புவழிகோலும் அதே வேளையில் கரியமில வாயுவின் (கார்பன்) வெளிப்பாடு இல்லாமல் இருப்பதே இதன் வரவேற்புக்கு முக்கிய காரணம்.

இது மிகப்பெரிய ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த பல்புகள் பயன் முடிந்து தூக்கி எறியப்படும்போதுதான் அந்த அபாயம் வெளிப்படுகிறது. நச்சு ரசாயனமான பாதரசத்தை இந்தச் செயலிழந்த பல்புகள் உள்ளடக்கி இருப்பதைப் பற்றி நாம் கவலைப்படுதில்லை .

சுற்றுச்சூழலில் பாதரசம் என்கிற ரசாயனம் மிகக் கடுமையான உடல்நலக் கேடுகளை உருவாக்கும் தன்மையது. சில வருடங்களுக்கு முன்னால் ஜப்பானில் பாதரசம் கலந்த தண்ணீரில் பிடித்த மீன்களை உட்கொண்டதால் ஆயிரக்கணக்கானோர் நரம்புமண்டல பாதிப்பைச் சந்திக்க நேர்ந்தது. மூளைக் காய்ச்சல் உள்பட பல நரம்புசம்பந்தமான் நோய்களை ஏற்படுத்தும் தன்மையது பாதரச உலோகம்.

சமூகக் கட்டுப்பாடு அதிகம் இல்லாத நாடுகளில் எல்லா குப்பைகளையும் ஒன்றாக கொட்டுவது வழக்கம். இதில் பயன் பாடு முடிந்த ஃப்ளோசரன்ட் பல்புகள் உடைந்து அதிலுள்ள பாதரசம் மண்ணிலோ காற்றிலோ கலந்து சுற்றுச்சுழல் பாதிக்கப்பட்டு ரசாயனத்தின் பாதிப்பு மனிதர்களை தாக்குவது எதிர்பார்க்க வேண்டிய விபத்து.

உடனடியாக விழித்துக் கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது. விஞ்ஞான வளர்ச்சியின்ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ள தயங்குவது விவேகமல்ல!

1 comment:

puduvaisiva said...

Thank you very much for your kind information.

LinkWithin

Related Posts with Thumbnails