Tuesday, March 10, 2009

சுடுக்காட்டு காதல்

அந்த காலேஜ் பையனுக்கு வீட்டில் பயங்கர நெருக்கடி. கல்லூரி இல்லாத நாட்களில் செல்போன் தான் அன்றைய வாழ்வு. கல்லூரி உள்ள நாட்களில் மாலை ஐ ந்து மணி முதல் செல்போன் அவனோடு ஒட்டி கொண்டு விடும்.

அவனுடைய வீடு கண்டிப்பு நிறைந்தது. முதலில் நண்பர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்துள்ளார்கள். நாள் ஆக ஆக அவனுடைய வீட்டில் இவனிடம் விசாரணை அதிகமானது.

பேசுவதற்கு நெருக்கடி அதிகமானவுடன் வீட்டை விட்டு வெளியே சென்று பேச ஆரம்பித்தான். மாலை ஐந்து மணி ஆகி விட்டால் போதும்தன்னுடைய பைக் எடுத்து கொண்டு பக்கத்திலுள்ளகிராம சாலைகளுக்கு சென்று பேசி கொண்டே இருப்பான்.

கிராமத்திலிருந்து வருவோர் போவோர் இவனை வித்தியசமாக பார்த்தபடி செல்வார்கள்.

இரண்டு நாட்கள் ஒரு தடவை சாலைகள் மாறிகொண்டேயிருக்கும். அதில் ஒரு சாலை சுடுக்காட்டுக்கு செல்லும் பாதை .

அந்த பாதையில் போய் சுடுக்காட்டிற்கு அருகில் போய் பேசுவான் பொழுது சாய்ந்தவுடன் அங்கிருந்து கிளம்புவான்.

வார நாட்களில் மூன்று நாட்களில் அந்தசாலையில் பார்த்து விடலாம்.

சுடுக்காட்டு காதலாக இருக்குமோ இது...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails