Saturday, March 14, 2009

உங்க காலத்திலேயே கிலோ முப்பதுன்னா

தந்தை பையன் வீட்டு கூடத்தில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள். தாத்தாவும் உட்காந்திருந்தார். தாத்தா வாத்தியார் தொழில் பார்த்து ஓய்வு பெற்றிருந்தார்.பையனுக்கு அங்கே இங்கே அலைந்து திரிந்து அவரையும் ஆசிரியர் பணியில் அமர்த்திவிட்டார்.

சார் …அரிசி என்று வீட்டு வாசலில் குரல் கேட்டது.
போய் வாங்கிட்டு வாடா என்று பேரனை விரட்டினார் தாத்தா.

வாங்கி வந்து இறக்கி வைத்த கையோடு கிலோ எவ்வளப்பா என்றான்.

அரிசி ஒரு கிலோ முப்பது வரும் என்றார்.

உங்க காலத்திலேயே கிலோ முப்பதுன்னா எங்க காலத்துல கிலோ முன்னுறோ…மூவாயிரமோ தெரியல..

நீங்க பாட்டுக்கு எனக்கு வெறும் வீட்ட மட்டும் சொத்தா எழுதி வைச்சுபுடாதீங்க அஞ்சாறு லட்சம் பணமா
வைச்சுட்டு செத்துபோங்க என்று பையன் சொல்ல..

அதிர்ந்து போய் எதுவும் பேசாமல் அப்பாவும் தாத்தாவும் மௌனமாய்..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails