மரணப் படுக்கையில் இருப்பவர் ஆழ்ந்த அமைதியான நிலையில் தனது வாக்குமூலத்தை தருகிறார். இந்த வாக்கு மூலம் புனிதமானது.
இதில் அடங்கியுள்ள உண்மையை நம்புவதற்கு சட்டத்தில் இடம் உண்டு இதன் காரணமாகவே மரண வாக்குமூலம் அளிக்கும்போது சத்திய பிரமாணம் எடுப்பதும் குறுக்கு விசாரணை செய்வதும் தவிர்க்கப்படுகிறது.
மிக அபூர்வமாகவே மரண வாக்குமூலம் பொய்யாகி விடுகிறது. ஏனெனில் மிக கொடுமையான குற்றத்தில் பாதிக்கப்பட்டவர் மட்டுமே நேரில் பார்த்த சாட்சியாக உள்ளார்.
மரணவாக்குமூலம் ஓப்பிப்பது போலவோ கற்பனையாகவோ இருத்தல் கூடாது. மரண வாக்குமூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நீதிமன்றம் நம்பினால் மேற்கொண்டு அதை உறுதிப்படுத்துவதற்கு சான்றுகள் தேவையில்லை.
மரணப்படுக்கையில் மிக அபூர்வமாகவே ஒருவர் பொய் சொல்வார் என்று உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
No comments:
Post a Comment