காலேஜ் இளைஞன் தன் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தான் வீட்டுக்கு போக மனசு இல்லை . அவனுடைய செல்பேசி ஒலித்தது யார் அழைப்பது என்ற கேள்வியுடன் செல்பேசி பார்த்தான் “ காலிங்..அப்பா..” என்று வந்தது ..
அப்பா..என்னப்பா..
எங்கடா இருக்க ..
முக்கியமான குறிப்பேடு வாங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போய்கிட்டிருக்கேன்.
அப்படியா..சரி நீ போ..
என்னப்பா விசயம்..
முக்கியமான சேதி தான்..சரி நீ போ..
நான் பாத்துக்கிறேன்.
இவன் நின்று கொண்டிருந்தது தன் நண்பர்களுடன்.
காலேஜ் விட்டு வந்தவுடன் முகம் கை கால் அலம்பி டீ குடித்து நோட்ஸ் எழுதப்போறேன் கூப்படாத என்று அம்மாவுக்குகட்டளையிட்டபடி தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் யுவதி.
நுழைந்த கையோடு கைகள் பரபரத்தது தன்னுடைய செல்போன் நம்பர் பேடில் மிஸ்டு கால் ஒன்று கொடுத்து கட் பண்ணினாள்.
மறுநிமிடமே அவளுடைய செல்பேசி அவளோடு ஒட்டி கொண்டது.
இரவு சாப்பாடு என்ன செய்யவேண்டும் என்பதற்காக தன் பெண்ணுடைய அறைக்கதவை தட்டினாள் தாய்..
நான் சொல்லிட்டு தான போனேன் . தொந்தரவு பண்ணிகிட்டே இருக்கியே ஏன்? உக்கிரமாய் கத்தினாள் பெண்.
பேசி கொண்டிருந்தாள் எழுதவில்லை.
தெரியாதனமா பாரதி எழுதிபுட்டாருங்க..
பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும் கவனி!
பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்
பயம் தீர்ந்தால் நேரே பார்க்கலாம் கவனி!
பொய் தீர்ந்தால் பயம் தீரும்!
பயம் தீர்ந்தால் பொய் தீரும்!
No comments:
Post a Comment