கிராமத்து நண்பனிடம் அவனுடைய நண்பர்கள் குழு மாப்ள நாளக்கு காலையிலே வர்றோம் கலப்படம் இல்லாத கள்ளா வாங்கி வைங்க என்றார்கள்.
சொன்னபடி காலை ஆறு மணிக்கெல்லாம் சங்கமம்ஆனார்கள் அந்த நண்பர்கள் குழு அங்கிருந்து கிராமத்து நண்பனுடைய வீட்டிற்கு சென்றது.
கள்ளை நண்பனுடைய தாத்தா வாங்கி வந்தார். பெரிய சட்டியில் அசடுடன் நுரைத்து இருந்தது கள். ஏற்கனவே கள் குடித்த அனுபவ நண்பன் ஒருவன் சட்டியை எடுத்து நுரையை ஊதி ஊதி தெளிவான கள்ளை சொம்பில் ஊற்றி கொடுத்தான்.
கள் சாப்பிடுவதற்கு வசதியாக சுண்டல் எலி கறி வைக்கப்பட்டிருந்தது. தேவை தக்கவாறு குத்தார்கள். முன் எச்சரிக்கை உள்ளவர்கள் அளவுடன் குடித்தார்கள். குடித்து அனுபவபட்டவர்கள் தயக்கம் இல்லாத மற்றவர்களை விட நிறைய குடித்தார்கள்.
முன் பின்னாய் ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டார்கள் . கண்கள் சிவ்வென்று இருக்க லேசான கிறக்கம் அங்கிருந்த பெரியவர் கள்ளின் மருத்துவ குணங்கள் மற்றும் அவர்கள் முன்காலத்தில் குடித்த விதம் பற்றி விளக்கி கொண்டிருந்தார்.
பெண்களுக்கு வரும் வெள்ளைபடுதல் என்ற நோயை தினமும் ஒரு டம்ளர் வீதம் நாற்பது நாட்கள் குடித்து வந்தால் தீர்ந்து விடும் ஆஸ்துமா நோய் குணமாகி விடும் என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தார்.
நேரம் ஆகியதும் உட்காரமறுத்த கால்கள் பேச்சை நிறுத்தி வெளி கிளம்பின சிறு தள்ளாட்டத்துடன் கேலி பேச்சுகளுடன் தங்கள் சங்கமித்த இடம் நோக்கி அந்த நண்பர்கள் குழு புறப்பட்டது.
No comments:
Post a Comment