Saturday, March 28, 2009

பெண் வேண்டாம் பெண்ணோட தோழி போதும்.

மணலூருல பாப்பைய்யன் பொண்டாட்டி செத்துப்போச்சுன்னு துக்கம் சொல்ல சொன்னாங்க..

என்னது…

பாப்பைய்யன் பொண்டாட்டிங்க…

நாற பு… அவ மவலால ஏதோ செஞ்சுட்டு செத்துபோயிட்டா போலிருக்கு..

பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கல்யாணமா இவன் பொண்ணு போயி அலங்கார செய்ய போனாய்யா..

மாப்பிள்ளகாரன் அப்பயே இவள கணக்கு பண்ணிபுட்டான் கல்யாணமுடிஞ்ச கையோட அவளோடு வாழமா இவள இழுத்துகிட்டு ஓடி போயிட்டான். அதிலிருந்தே பாப்பைய்யன் பொண்டாட்டி என்னமோ மாதிரி இருந்திச்சிசான் ரெண்டு நாளக்கு முன்னடி தான் சொல்லிட்டு இருந்தான்.

நான் தொலச்சு தல முழுவிட்டு போங்கய்யா சொல்லிட்டு வந்தேன் என்றார்.

அதான் ஏதோ செஞ்சிட்டு செத்து போயிட்ட போலிருக்கு என்றவாறு துக்கம் விசாரிக்க கிளம்பினார் அந்த பெரியவர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails