Saturday, March 07, 2009

நிம்மதியாய் நீ தூங்கு

உன்னில்
ஆயிரம் கவலைகள்

நகராமல் நடுவே
நிற்கும் கல்லாய்
உனது வேதனைகள்

தவிர்க்க முடியா
வாழ்க்கையின்
ஓர் அங்கமாய்

உருண்டோடும்
வாழ்க்கையின் சக்கரம்
சுழன்றபடி
இருக்க...

நின்று விட்டால்
வாழ்க்கை ஏது?
முகவரி ஏது?

நிம்மதியாய்
நீ தூங்கு.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails