எப்பா தூங்கிறதா திருச்சிக்கு அதிகாலையிலே வந்துர்றாங்க நீ மட்டும் போய் அழைச்சிட்டு வரணும் என்ன..
சரிண்ண நான் போய் அழைச்சிட்டு வர்றேண்ண..
அந்த அதிகாலை மூடுபனி எதிர் வரும் வண்டிகள் ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை.
அரசாங்க பேருந்து ஒன்றின் மீது இவன் ஓட்டி சென்ற டாடா சுமோ மோதியது. மருத்துவமணை கொண்டு செல்லும் வழியில் இறந்து போனான்.
வருத்தங்களை தன் மனதோடு வைத்து வெளியில் சிரித்தபடியே பேசுவான். வயது இருபது. வயதுகேற்ற ஆசைகள் அதிகம் துடிப்பு அதிகம்.
எல்லோரும் போல படிக்கதான் ஆசை . வறுமை வந்துவிட்டால் வயிற்றுக்கான பிழைப்பே பிரதானம்.வீட்டின் வறுமை தொழில் கற்று டிரைவர் ஆனான்.
ஓரிரு வருடங்கள் தான் முழுடிரைவர் ஆனான்.விதி தன் பணியை செவ்வனவே செய்துவிட்டது.
வறுமையை இவன் விரட்டினானா அல்லது இவனை வறுமை வாழ்க்கை விட்டே விரட்டியதா தெரியவில்லை.
No comments:
Post a Comment