Friday, April 03, 2009

ஆதரவு தரவேண்டியவர்களே மிதித்தால்

மிகுந்த மன உளைச்சலில் இருந்தான் அவன்.

பெரிய குடும்பம் அது. பெண்கள் இரண்டு பையன்கள் இரண்டு அப்பா வகையில் பயன் ஒன்றும் இல்லை. மிகுந்த சிரமங்களுக்கிடையே வாழ்க்கை நகர்ந்தது.

கறவை மாடு , மாடு சார்ந்த தொழிலும் தான் அவர்களின் வாழ்க்கைக்கு உதவியது. இவன் சிறுவயதிலேயே பதினைந்து வருடம் வெளியூர் சென்று வேலை ப்பார்த்து பெண்களை ஒருவாறு கரையேற்றினான்.

இவனுக்கு திருமணம் ஆனது. இடையில் இவனுடைய அப்பாவும் போய் சேர்ந்து விட குடும்பத்தை கவனிக்க ஆள் இல்லாததால் வேலையை விட்டு சொந்த ஊர் வந்து சேர்ந்தான். தம்பி வெளிநாட்டில் இருக்கிறான்.

இவனுடைய மனைவிக்கும் அம்மாவுக்கும் ஆகாமல் போனது. யார் இவனுக்கு ஆதரவு தர வேண்டுமோ அவர்களே வீம்பு பிடித்தார்கள்.தனி சமையல் ஒத்துழையாமை இயக்கம்.

எந்த பக்கம் பேசுவது தெரியாது நிம்மதியை தேடினான் இவன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails