ஒரு பெண்ணுக்கு 28 வயது இன்னொரு பெண்ணுக்கு 26 வயது கடைசியாக பையன் வயது 20 கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறான்.
பெண்களுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. கையில் சேமிப்பு பணம் கொஞ்சம் வைத்திருந்தார்கள். எப்படியோ கடனை வாங்கி இருப்பதை வைத்து ஒரு பெண்ணை கரையேற்றி விடலாம் .
பையன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று சொல்ல பெண்ணுடைய திருமணமா பையனுடைய கல்வியா விவாதங்களை வென்றது பையனுடைய கல்வி.
திரும்பவும் கையில் வைந்திருந்த சேமிப்பை உண்டு பண்ண இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். இதற்கிடையில் பையனின் படிப்பு செலவுகள்.
கடன் வாங்கி கல்யாணத்தை பண்ணிவிடலாம் என்று உறவுகள் சொன்னால் யாரிடமும் கடன் வாங்காமல் கல்யாணம் பண்ணிவைக்கவேண்டும் என்ற அப்பாவின் பிடிவாதம்.
இன்னமும் முதிர்கன்னிகளாய் பெண்கள்.
No comments:
Post a Comment