Thursday, April 16, 2009

ஏனடா என்னை காதலித்தாய்?

என்னை ஏன் காதலித்தாய்?

உனக்காக என்னையே தந்து என்னபயன்? என்னவனே..
தவறு பழக்கத்தால் சொல்லிவிட்டேன்.

என்னமோ வந்தாய்…வண்ணமுகம் காட்டினாய்..
மின்னல் புன்னகை பூத்து நான் வீழ என்னில் உன்னை ஏற்றும் வேளைதனில் நீ மறுத்தாய் ஏன்?

வந்து போன வசந்தமா நீ
இல்லை வேகமாய் வந்த புயல் அல்லவா நீ

புயலுக்கு பின் அமைதி எங்கும் அமைதி
என்னுள்..அழிவுக்கு பஞ்சமில்லை.

பசி மறந்து தூக்கம் கெட்டு நண்பர்களை பிரிந்து ..சே!

என்னை உன்னில் ஏற்றிவிட்டாயோ இல்லையோ உன் நினைவுகளை ஆலவிருட்சமாக வளர்த்து விட்டாய் என்னுள்.

வாழ்வு நீ! நீயே வாழ்வு என்று எண்ண என் எண்ணங்களையெல்லாம் எடுத்தெறிந்தவன் நீ!

உனக்காக தானடா உறவுவிட்டு உண்மைநண்பர்களை உதறி
என் நலம் மறந்து
உன் நலம்நினைத்த என்னைஉன் (மன )வாசல் மிதியாதே என்றும் சொன்னது ஏனோ?

உண்மை தெரியாது
போலிக்கு மயங்கிவிட்டேன் போலியான அன்புக்கு மயங்கிவிட்டேன்

பரவாயில்லை சிறிது காலம் வந்து போனாலும் இனிய நினைவுகள் கொடுத்ததற்கு நன்றிகள் கூறி பொய்யாய் உனை வாழ்த்தும்..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails