எழுத நினைத்தவைகள்
எழுதபடாமல்
என்னுள்ளே அமிழ்ந்து
போகும் எண்ணங்கள்
வெளிச் சொல்லி
ஆறுதல் தேட
பயமாய் நான்
பகிர்ந்து பாதியாய்
பிரிக்க
துணை தேடுதல்
தேடும் துணிவு
போதாது
காரணமாய்
சுற்றமும் சூழ்நிலையும்
பகிர்ந்து கொள்ள
நிலையான ஒன்றை
துணை தேட
நிலை எது?
நிலையாமை எது?
மனதின் கேள்வி
எழுத நினைத்தவைகள்
எழுதபடாமல்…
No comments:
Post a Comment