Monday, April 13, 2009

எழுதபடாமல் என்னுள்

எழுத நினைத்தவைகள்
எழுதபடாமல்
என்னுள்ளே அமிழ்ந்து
போகும் எண்ணங்கள்

வெளிச் சொல்லி
ஆறுதல் தேட
பயமாய் நான்

பகிர்ந்து பாதியாய்
பிரிக்க
துணை தேடுதல்

தேடும் துணிவு
போதாது
காரணமாய்
சுற்றமும் சூழ்நிலையும்

பகிர்ந்து கொள்ள
நிலையான ஒன்றை
துணை தேட

நிலை எது?
நிலையாமை எது?
மனதின் கேள்வி

எழுத நினைத்தவைகள்
எழுதபடாமல்…

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails