எங்கள இல்லாம உங்களுக்கு ஏது சொந்தம்? பாத்து மரியாதை நடந்துக்க அவனுடைய அப்பாவழி உறவுக்கார பையன் திட்ட மௌனமாய் நின்று கொண்டிருந்தான் இவன்.
உள்ளுக்குள் மென்று முழுங்கினான் எதிர் வார்த்தை பேசிவிடலாம். அதற்கு தகுந்த பலம் இல்லாததால் தலை குனிந்தவாறு நின்றான்.
வாழ்க்கையின் போக்கில் நொடிந்த குடும்பம் இவனது குடும்பம். உறவுகளோடு ஒத்து போனால்தான் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் நல்லது என்று நினைத்தவாறு பொறுமையாய் நின்றான். தன் நலத்தைவிடவும் இங்கு குடும்ப நலன் முக்கியம்.
பேசி முடித்தார் இல்லை திட்டி முடித்தார். இவன் மனது வேதனையானது நமக்கு மட்டும் ஏன் இப்படி? குழப்பம் தான் வந்தது ஓர் முடிவுக்கு வரமுடியாது கடைசியில் தன் தலைவிதியை நொந்து கொண்டான்.
உறவுகார திருமணம் ஒன்றில் இவன் கலந்து கொண்டதால் வந்த விளைவு இது.
தனி மனித உணர்வுகள் காரணமே இல்லாது யார் வேண்டுமானலும் சிதைக்கலாம். சூழ்நிலைகளே நிர்மாணம் செய்கின்றன. யாரும் தப்பமுடியாது உணர்வுகளின் தாக்குதலுக்கு என்பது தான் உண்மை.
No comments:
Post a Comment