காலையில் எழுந்திருந்து பார்த்தான் கண் இமைகளை தடவினான். ஒரு கண் இமையில் கட்டி வந்திருந்தது. என்னடா இது இரவு படுக்கை போகும் போது கண் இமை நன்றாக இருந்தது என்று நினைத்து கொண்டே படுக்கைவிட்டு எழுந்தான்.
என்னடா தம்பி கண்ணு வீங்கிருக்குஎன்றாள் தாய்.
ஹீட் போலிருக்கு கண் கட்டி வந்திருக்கும்மா என்றான்.
ஒண்ணுமில்லேடா ..உன் விரல உள்ளங்கையில தேச்சு சூடா வைடா அப்புறம் உன் எச்சில தொட்டு போடுடா சரியா போயிரும் நல்ல மருந்துடா அது என்றாள் தாய்.
வாயில் உமிழ்நீர் சுரந்து எச்சில் ஆனது. துப்ப எத்தனித்து துப்பினான். எட்டி போய் விழாமல் அவன் சட்டையின் மேல் வழிந்தது.
அய்யோ.. சே..என்று தன்னை நொந்தான்.
பக்கத்திலிருந்தவன் முகம் சுழித்து அந்த இடம் அகன்றான்.
ஒரு இடத்தில் மருந்தாகியது மற்றொரு இடத்தில் அசிங்கமானது.
No comments:
Post a Comment