பாரதியார் இயற்றிய புதிய ஆத்திசூடியில்
“கோல்கைக் கொண்டுவாழ்” என்பதற்கு ஆட்சியை அயலானிடம் விடாமல் சுயாட்சியைப் பெறுவாயாகஎன்பது பொருள். இதில் கோல் என்பது ஆட்சியைக் குறிக்கும்.
“ஞமலி போல் வாழேல்” என்பதற்கு நாயைப் போல் வாழாதே பிறர் உண்டு எஞ்சிய எச்சிலைத் தின்று வாழ்வது நாய். அது போல் நீயே உழைத்து உண்ணாமல் பிறருடைய உழைப்பினால் வந்ததை நுகர்ந்து சோம்பேறியாக வாழாதே என்பது அதன் பொருள்.
No comments:
Post a Comment