ஒரு முனிவரும் அவேரோட சீடரும் நீண்ட பயணம் மேற்கொண்டார்கள். பயணத்தோட இடையில் ஆறு குறுக்கிட்டது.
ஒரு பெண் ஆற்றைக் கடக்க வழி தெரியாமல் கரையில் நின்று கொண்டிருந்தது. இவர்களை ஆற்றை கடக்க உதவுமாறு வேண்டிக்கொள்ள சீடன் பெண்ணை தொட்டால் பாபம் அதனால் நான் உதவ முடியாது என்று சொல்லிவிட முனிவர் தன்னுடைய தோளில் அந்த பெண்ணை சுமந்து ஆற்றை கடந்து மறுகரையில் இறக்கிவிட்டு முனிவரும் சீடனும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்கள்.
சீடனுக்கு மனதில் குறு குறு என்று இருக்க நமக்கு பெண்ணை தீண்டுவது பாபம் பார்ப்பது பாபம் என்று சொல்லி கொடுத்து விட்டு இவரே எதிர்மாறாக நடக்கிறாரே என்று சஞ்சலம் அடைந்தவனாய் எப்படியாவது குருவிடம் கேட்டுவிடவேண்டும் என்று நினைத்தவாறு மௌனமாய் குருவுடன் பயணத்தை தொடர்ந்தான்.
இவனது மௌனம் கண்ட குரு என்ன என்று கேட்க தன்னுடையசந்தேகத்தை கேட்டான் சீடன் குருவிடம்
ஆற்றை கடந்தவுடனே அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டேன். நீ இன்னமும் சுமந்து கொண்டு வருகிறாயே என்று சீடனிடம் கேட்டார்.
சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை அவனது முகத்தை பார்த்து புரித்து கொண்ட குரு சீடனிடம் எப்பொழுது நான் ஆற்றின் மறுகரையில் அந்த பெண்ணை இறக்கிவிட்டோனோ அப்பொழுது மனதிலிருந்தும்மறந்து விட்டேன். நீ இன்னமும் மனதில்தூக்கி வருகிறாயே என்று சொன்னார்.
மனச குப்பையா வச்சுக்க கூடாதுன்னு சொல்லவர்றாங்க போலிருக்கு..
1 comment:
நல்லாயிருக்கு!!
Post a Comment