Thursday, May 14, 2009

பந்தயக் குதிரைகள்

தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ மாணவியர்கள் மட்டும் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.பல இடங்களில் முற்பகல் மட்டும் இவர்களுக்காகச் செயல்படுகிறது.

பிளஸ்-2 தேர்வுக்குரிய பாடங்களை கோடை விடுமுறையில் நடத்தி முடித்துவிடுகிறார்கள் . சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் பிளஸ்-2 தொடங்கி விடுகிறது.

அரசுப்பள்ளிகளில் நல்ல நாளிலேயே தில்லை நாயகமாக இருக்கின்றன. தனியார் பள்ளிகளிலாவது இத்தகைய நல்ல கல்வி கிடைக்கட்டும் என்ற தவறான கருத்து பொதுமக்களிடம் உள்ளது.

தங்கள் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றார்கள் என்றும் இத்தனையாவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி தம்பட்டம் அடிக்கவும் விளம்பரத்தின் வாயிலாக மாணவர்களை வைத்து பணம் சம்பாதிக்கவும் தான் என்பதை பொதுமக்கள் அறிவதில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வெறும் கேள்வி பதிலை மட்டுமே மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் மூளைத்திறன் மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது. மனவெறுமையை இட்டு நிரப்ப சிலர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். சிலர் இரக்கமற்ற முரடர்கள் ஆகிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாதா என்றும் ஆதங்கப்படுவதுதான் நமது தலைவிதி என்று நினைத்துவிட முடியாது.

-தினமணி-

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails