Tuesday, May 19, 2009

வாழ்ந்திருக்கும் விடுதலைபுலிகளின் இயக்கதலைவர்.

செய்தி எதுவாக இருந்தால் என்ன? வாழ்ந்திருக்கும் விடுதலைபுலிகளின் இயக்கதலைவர் அல்லது மடிந்திருக்கும் இயக்கதலைவர் நேரடியாக தோன்றாத வரையில் அவரைப்பற்றிய அனுமானங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தும் செய்தியாக பாவித்து மிக சிறந்த வியாபாரமாக ஊடகங்களால்ஆக்கப்படுகின்றன் .

பொறுமைகாத்து அடுத்துநடக்கும் நிகழ்வுகளை கண்கொண்டு பார்ப்போம் காதுகளால் கேட்டு அறிவோம்.

உரிமைகைளை கொடுக்க மறுத்து உரிமைகள் மீறும் இடத்தில் தான் பேராட்டம் தொடங்குகிறது. அது மக்கள் போராட்டமாகவோ அல்லது ஆயுத தாங்கிய போராட்டமாகவோ இருக்கலாம். விடுதலைபுலிகளின் இயக்கம் தோன்றுவதற்கான ஆதி இது. இலங்கை அரசின் ஒரு தலைபட்சமானமுரண்பாடான கொள்கைகளினால்தான் தன்னுடைய நாட்டிற்குள்ளே இலங்கை அரசுக்குபோரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது.

விடுதலைபுலிகளை எதிர்த்து இலங்கை அரசுடன் கைக்கோர்த்த இயக்கங்கள் தன் இன மக்களுக்காக என்னமாதிரியான உரிமைகளை பெற்று தரப்போகிறார்கள் என்பதை வரும்காலங்கள் தான் பதில் சொல்லும் அது வரையில் பல கண்ணுக்கு தெரியா கசப்பான அவலங்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்டாகும் இது உண்மை.

எதிரி இருந்தவரையில் எதிரிதான் இலக்கு எதிரி இல்லாதபோது இனி அவனோடு சேர்ந்து இருந்தவர்கள் இலக்கு என இலங்கை அரசு நடக்கும். எல்லாவற்றையும் பொறுத்துகொள்ளும் சக்தி தமிழர்கள் ஆகிய நமக்கு வேண்டும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails