இன்றுசெய்திதாள்கள் அத்தனையும் பிரபாகரன் மரணம் பற்றியசெய்தியை அடக்கியே பிரச்சுரம் செய்திருந்தன. நேற்றைய பரபரப்பு மக்களிடையே காணப்படவில்லை. செய்தியின் உண்மை நிலைமை அறிய ஆர்வம் காட்டினார்கள்.
செய்தியின் தன்மை மாறி ஆராய்ந்து அறியக்கூடிய செய்தியாக மாறியது. பிரபாகரனின் மரணம் பற்றி இலங்கை அரசின் முன்னுக்கு பின்னான தகவல்கள் அதைப்பற்றிய இவர்களின் சந்தேகங்கள் என செய்தியின் இயல்பு மாறியுள்ளது.
உண்மை என்னவென்பது இரு தரப்புகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். அதுவரையில் இச்செய்தியின் அனுமானங்கள் அனுமானங்களாகவே தொடரும்.
நாள் ஆக ஆக செய்தியின் முக்கியதுவம் குறைந்து நாம் நம்முடைய வேலைகளில் கரைந்துவிடுவோம்.
எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை அறிந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment