இலங்கையுடன் என்பதைவிட இந்தியாவுக்கும் விடுதலைபுலிகளுக்குமான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதுகிறார்கள். பிரபாகரனுடைய இறப்பில் இன்னமும் மர்மங்கள் நீடிக்கும் நிலைமையில்பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என இலங்கை அரசு அறிவித்த நாள் முதலாய் இந்தியாவி ன் ராஜ்ய தூதர்கள் கொழும்புக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கிட்டதட்ட எல்லாம் முடிந்துவிட்ட சூழலில் இனி எதைப்போய் மீட்டு தரப்போகிறார்கள்இறந்த எத்தனையோ உயிர்கள் இனி நமக்கு வாழ்வு உண்டா என்ற வினாவுடன் உயிரை தக்கவைத்து கொண்டிருக்கும் உயிர்களுக்கு இவர்களின் பதில் என்ன?
“புலிகளை கொன்ற தெய்வத்துக்கு நன்றி” எனப் போஸ்டர்கள் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் விசுவாசியில் ஒட்டப்பட்டிருக்கும் அவலம்.
இவர்களும் ஓர் இனத்தின் மனிதர்கள்தானா?
நம்மால் ஆதரவு கொடுக்க முடியவில்லை என உலகெங்கிலும் துடித்த இதயங்கள் லட்சம் , கோடி . ராஜ்ய உறவுகள் என்பவை ஒரு தனி மனிதனின் லாப நஷ்ட கணக்குகள் கிடையாது. உயிரை தக்கவைக்க போராடும் பல லட்ச மக்களின் கஷ்ட நஷ்டங்களுக்கு உட்பட்டவை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
No comments:
Post a Comment