இலங்கையில் போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்துள்ள சூழ்நிலையில் முகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளதமிழர்கள் படும் துயரங்கள் பற்றி பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட ஆரம்பித்துள்ளன.
தமிழினம் படும் துயரங்களையும் அவலங்களையும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். இது ஒவ்வொரு செய்தி ஊடகங்களின் தலையாய கடமையாகும்.
உலகெங்கிலும் பரந்து வியாபித்துள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு வந்த துயரென நினைத்து தன்னுடைய வீட்டுக்கு வந்த துயெரென நினைத்து முடிந்தவர்கள் ஏதோ ஒரு வழியில் தன்னுடைய ஆதரவை உதவிகளை செய்யவேண்டும்.
பசிக் கொடுமை நோய் கொடுமை இரண்டிலிருந்தும் மீட்டு அவர்கள் வாழ தேவையான அடிப்படை உரிமைகளை பெற்றுதர வேண்டும் இது சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும்.
No comments:
Post a Comment