நான் எங்க வீட்டுல இந்த வேலையெல்லாம் பாத்தது கிடையாதுங்க அந்த வீட்டுக்கு வந்த புதுப்பெண் சொன்னாள்.
என்ன தெரியாது.தெரியாதுன்னு சொல்லாத வேலையை பாக்க கத்துக்க என்றான் புருசன்.
அதெல்லாம் போவ போவ சரியாயிருண்டா.. நீ போடா… நான் சொல்லி தர்றேன் என்றாள் மாமியார்.
இதெல்லாம் சும்மா ஏமாத்துற வேல எல்லா வேலை பாக்க தெரியும் சும்மாவது சொல்லறது இந்த வேல தெரியாதுன்னுட்டு என்றாள் நாத்தனார்.
இரவு வீடு திரும்பிய கணவனிடம் ஏங்க உங்க தங்கச்சி என்ன அது இது சொல்லிகிட்டே இருக்காவே என்றாள் புதுப்பெண்.
என்ன செய்யனுங்கற சொல்லு என்றான் கணவன்.
நீங்க போயி கேட்டுறாதீங்கநான் சும்மா சொல்லி வக்றேன் உங்ககி்ட்ட என்றாள் புதுப்பெண்.
இவன் மனசுல வேகம் வந்தது என்னடா இது இவ்வள கஷ்டப்பட்டு நாம குடும்பத்துக்கு செய்றோம் என்று நினைத்தவாறு வேலை சென்றான்.
சில நாட்கள் கழிந்தன உம்முன்னு புதுப்பெண் நின்றுகொண்டிருந்தாள்.
ஏன்டீ..கணவன்
ஒன்னுமில்ல புதுப்பெண்
சொல்றியா இல்லையா..கணவன்
என்ன ஒரு மாதிரி பேசிகிட்டே இருகாங்க புதுப்பெண்.
யாரு..
உங்கதங்கச்சி…
தங்கச்சி உரக்க கத்தினான் கணவன்.
குடும்ப போருக்கு சங்கு ஊதப்பட்டது.
No comments:
Post a Comment