இரவு தூக்கத்தில் இருக்கும்போதே கைகளால் தடவுவான் உடல் தட்டுபடுகிறதா என்று அப்படி தட்டுபடவில்லை என்றால் “அப்பா..எப்பா” என்பான் உடன் அவனது அப்பா ஏன்டா தம்பி என்றால் திரும்பவும் தூங்க ஆரம்பிம்பான் இல்லாவிட்டில் உடனே அழகைதான்.
அவருக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று இரண்டு குழந்தைகளும் மிகவும் கம்மியான இடைவெளி அதனால் மூத்த குழந்தையை பார்த்து கொள்ளமுடியாமல் தன்னுடைய மாமனார் வீட்டில் வளர விட்டிருந்தார். வாரம் ஒரு தடவை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை போய் பார்த்து வருவார்.
ஊருலிருந்து வரும்போது மெலிந்துமுகம் களை இழந்து காணப்படுவான். வந்து பெற்றோர்களுடன் தங்கியதும் ஆள் மாறிவிடுவான் சிரித்துகொண்டே இருப்பான்.
வார லீவு முடியும் ஊரில் கொண்ட விட்டால் அவன் அசந்து இருக்கும் நேரத்தில் வந்துவிடுவார். வந்து அப்பாவை தேடுவான் அழுவான் தூங்கி போவான்.
இன்றும் இரவுகளில் அவன் அப்பாவை கைகளுக்கு தட்டுபடுகிறரா என்று தேடுவான்.
No comments:
Post a Comment