Saturday, May 30, 2009

ஆதரவு என்று பெயரில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டலஞ்சம் .

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்காது வாழ்விக்க வழிசெய். இரக்கம் காட்டாது உதவி செய். அவர்கள் வாழ்வில் எத்தனையோ உதவிகளை ஒருவருக்கு ஒருவர் செய்திருக்கலாம்நேற்று வாழ்ந்தவர்கள் இன்று பிறர் மனதை கைகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயம்.

ஏனென்றால் அவர்கள் தன் உரிமைக்காக போராடி தோற்றவர்கள். காயங்களுக்கு மருந்துதான் தேவை ஆறுதல் அல்ல. புள்ளி விபரங்கள் சொல்லலாம் கஷ்டப்படவில்லை என்று அங்குள்ள ஒவ்வொரு உயிருக்கும் தெரியும் தான் பட்டது என்னவென்று. எத்தனை போராட்டங்கள் எத்தனை துன்பங்கள். நிதம் செத்துமடிவதை விட போராடி தோற்று போ.

வஞ்சகர் வலை பின்னல் ஒரு இனத்துக்கு எதிராகஉலக நாடுகள் திரளும் அவலம் வேதனை. ஒன்றினைய அவர்களின் வஞ்சக கணக்கு சில பல லட்ச உயிர்கள் அவர்களின் தேவை. ஆதரவு என்று பெயரில் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் .

வரலாறு மாறும் நிச்சயம் மாறும் அடக்கபட்ட ஒன்று சக்தி பெற்றே தீரும் .

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails