அவன் மட்டும் தனியாக சென்றுக் கொண்டிருந்தான் அவன் நடந்தது அவன் வசிக்கும் பகுதியல்ல அவன் பகுதியிலிருந்து வெகுதொலைவு அங்குள்ளவர்களை அவனுக்கு நன்றாய் தெரியும் அடக்கமாய் நடந்து சென்றான்.
இவன் வயது ஒத்தவர்கள் நான்கைந்து பேர் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்கிண்டலடித்தார்கள் கண்டும் காணாதது காதில் வாங்காதது போல் விரைவாக நடந்து அந்த பகுதியை விட்டுவெளியேறினான்.
இன்னொரு சமயம் நான்கைந்து பேருடன் சென்றான் அந்தபகுதியில் பார்வைகளை படரவிட்டவாறே சாதாரணமாய் பார்த்தவர்களை கூட பயமுறுத்தும் பார்வையால் பார்த்தான்.
இங்கு இவனது பலம் அதிகமாய் இருந்தது. இன வாதமும் இப்படிதான் . இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே.
பலம் என்பதற்கு கீழ்தான் பலவீனம். மேல் மட்டத்தில் உள்ளவர்கள் எடுக்கும் மிக சரியான முடிவே வெளியில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற வழிப்பிறக்கும்.
No comments:
Post a Comment